மதன் Super Hero Member
Posts : 506
| Subject: கடி ஜோக்ஸ் Sun Aug 26, 2012 2:01 am | |
| கடி ஜோக்ஸ் நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.
என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க? டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான்.
வேலு : என் சொந்த ஊரு மதுரை. இப்பதான் திருச்சி வர்றேன். என் பேரு 'அங்கு ராஜ்' பாக்கி : இங்கு என்ன பேர் வச்சிருக்கீங்க?
சார், டீ மாஸ்டர் டீ போடறாரு, பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு, மேக்ஸ் மாஸ்டர் மேக்ஸ் போடறாரு, நீங்க ஹெட்மாஸ்டர் தானே ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?…
வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா? சர்தார்: ஆகிவிட்டது. வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்? சர்தார்: ஒர் பெண்ணை. வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்? சர்தார்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..
வேலு : எங்க ஆபீஸ்ல மேனேஜர் இருக்காரு கிளார்க் இருக்காங்க . . . கைப்பில்ல : இதெல்லாம் எதுக்கு எங்கிட்ட வந்து சொல்றீங்க? வேலு : நீங்கதானே படிச்சிட்டு யாராவது வேலையில்லாம இருந்தா சொல்லச் சொன்னீங்க.
வேலு : "ஓட்டல் ஓனர் வீட்ல பொண்ணு பார்க்கப் போனது தப்பாப்போச்சு" ரமனன் : "ஏன்?" வேலு : "பொண்ணு பிடிக்கலேன்னு சொன்னதும், சாப்பிட்ட பஜ்ஜி, சொஜ்ஜி, காபிக்கெல்லாம் காசு வாங்கிட்டாரு."
டாக்டர் : தினமும் குளுக்கோஸ் சாப்பிடுங்க மாயான்டி மாமா : அது கிடைக்கலேன்னா முட்டை'கோஸ்' சாப்பிடலாமா?
பட்டைய கிளப்பும் பாக்கி : "நடிகையின் இடையைப் பார்த்தே வக்கீல் கேள்வி கேக்குறாரே, ஏன்?" பேட்டை மாமா : "குறுக்கு விசாரணை பண்றாராம்".
வேலு : உங்க இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் என்ன காரணம்? ஓட்டல் ஓனர் : நான் என் கடையில் சாப்பிடவே மாட்டேன் அதுதான்.
பாக்கி : ஏன் சார் ஜோக் எழுதறேன்று சொல்றீங்க. ஆனா ஒரு ஜோக்குக்கு கூட சிரிப்பே வரலயே? ரமனன் : பிறர் சிரிக்கும் படியான காரியத்தை செய்யாதன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்வாங்க.
நிருபர் : உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க? நடிகை : நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்.
| |
|