திருமணத்திற்குப் பின்…!
* “என் மனைவி அபார கெட்டிக்காரி” நான் இரவில் வீட்டுக்கு திரும்பும்போது, அவள் சாப்பாடு தயராக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே வெந்நீர் எடுத்து வைப்பாள்” என்றார் இவர்.
“என் மனைவியும் தான். குளிர்ந்த நீரில் தட்டுக்களைக் கழுவுவது எனக்குப் பிடிக்காது என்பது அவளுக்குத் தெரியும்.” என்றார் இவர்.
* பெண் ஆசிரியை தமிழ் இலக்கணம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
“இப்போது சொல்லுங்கள். நான் அழகாக இருக்கிறேன்…இது எந்தக் காலம்?
ஒரு பையன் எழுந்து சொன்னான்…
“அது இறந்த காலம்.”
* திருமணத்திற்கு முன்
“வானத்தில் நட்சத்திரங்கள் ஏன் இன்று பளிச்சென்று இல்லை?” என்று கேட்டாள் அவள்.
அருகிலிருந்த அவன் சொன்னான். “உன் கண்களின் ஒளி வெள்ளத்தில் நட்சத்திரங்கள் மங்கிப் போய் விட்டன.”
உடனே அவள் அவனது கைகளைப் பற்றிக் கொண்டாள். முதல் நாள் சந்திப்பில் நடந்தது இது.
திருமணத்திற்குப் பின்
“வானத்தில் மிகவும் அருகே உள்ள நட்சத்திரத்தை அடைய எத்தனை தந்திக் கம்பங்கள் நடவேண்டும்” என்று அவள் அவனது கையைப் பற்றியபடி கேட்டாள்.
“மண்ணாங்கட்டி! கொஞ்சம் புத்திசாலித்தனமாகப் பேசித் தொலையேன்” கையை உதறியபடி சொன்னான் அவன்.