Abirami Hero Member
Posts : 153
| Subject: மொட்டின் மேல் பனித்துளி Tue May 07, 2013 12:29 pm | |
| மொட்டின் மேல் பனித்துளி
நின்றுத் தூங்கும் மொட்டின் மேல் நித்தம் செய்யும் உன் தவம் சிரிக்க தொடங்கும் போதிலே சிதறித்தானே போகிறோம்
ஆதவனின் காதலியே -உனை அரவணைக்க வருகிறான் அள்ளிச் செல்ல போகிறான் ஆசை கொண்ட என்னை விட்டு
எட்டுத்திக்கு சென்று வந்து எட்டிநின்று பார்த்திடினும் எள்ளி நகைக்கும் என்முகத்தை உணர்ந்தெனக்கு காட்டுவாயே
புல்லின் மீது படுத்துறங்கும் புரியாத தருணத்தில் பூரித்துப் போகிறேன் புத்தம் புது புல்லாக
சட்டென்றுத் தொட்டு சரணாகதியாக என் பாதத்தில் வீழ ஏற்பதில்லை என் மனம் -உடைவேன் உன் மரணத்தால் நானும்
உன் மேல் படுத்துறங்க ஓரிடம் எனக்கு வேண்டி -உன் குளிர் உள்ளத்தில் கூடெனக்கு தருவாயா இல்லை கலைந்து தான்செல்வாயா
வெட்கத்திற்கு விடை கொடுத்து வீதியிலே துயில்வாயா ? -இல்லை இந்த கண்மணியின் கரத்திற்கு கருணை தான் புரிவாயா ??? | |
|