தமிழகமெங்கும் ஓடுகிற ஆட்டோக்களிடம் லைசென்ஸ் இருக்கிறதோ என்னவோ கண்டிப்பாக அதன் பின்னால் நல்ல வாசகங்கள் இருக்கும்.
கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும்.கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.
-----------------------------------------------------------------------------
1. கடவுள் காதலித்தால் புராணம்
மனிதன் காதலித்தால் மயானம்
2. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.
வாழ்க்கை நரகத்தில் பயணப்படுகிறது.
3. பிச்சை புகினும் கல்வி தவறேல்
நஞ்சை பருகினும் காதல் தவிர்.
6. சுமக்க நானிருக்க நடை பயணம் ஏன்...?
7. சோர்ந்து போனாலும் ஊர்ந்து போக மாட்டேன்.
8. சாதல் சாதாரணம்
காதல் சதா ரணம்..
9. சீறும் பாம்பை நம்பு...
சிரிக்கும் பென்னை நம்பாதே...
10. பிரசவத்திற்கு இலவசம்.
11. வீட்டிற்க்கு ஒரு மரம் வளர்ப்போம்..
12. நாம் இருவர்.. நமக்கு ஒருவர்..
13. பெண்ணின் திருமண வயது 18
ஆணுக்கு 21
14. பெண்ணின் திருமண வயது 18
ஆணுக்கு 21
15. எப்போதும் நினைத்திரு...அப்போதும் வருவேன்
16. நான் ஞாயமான ஆட்டோக்காரன்
17. நான் ஞாயமான ஆட்டோக்காரன்
18.சாலையை பார்த்தால் சமத்து
சேலையை பார்த்தால் விபத்து
19.சாகசம் செய்யுமிடம் சாலையல்ல
மெதுவாய் செல்பவன் கோழையல்ல
20.ஒலி கொடுத்தால்
வழி கிடைக்கும்
விழி கொடுத்தால்
ஒளி கிடைக்கும்
21.காசு அளவு நேசம்
கை அளவு உள்ளம்
பொய்யான பாசம்
இதுதாண்டா உலகம் !
22.தொடர்ந்து வா! தொட்டு விடாதே!!”
23.அனைத்து மொழியையும் கற்று வை…
அன்னை மொழிமேல் பற்று வை…’’
24.மெதுவாகப் போ றோட்டில்!
காத்திருக்கிறாள் மனைவி வீட்டில்!!
25.லஞ்சம் வாங்காதே
பிச்சை எடு
26.கொடுத்தால் இன்பம்..
கெடுத்தால் துன்பம்...
27.அன்பை அளித்தால் ..
ஆசி பெறுவாய்..!
28.சென்னையில் ஓடும் ஒரு லாரியில்..
என்னைத் தொட்டால்...
விண்ணைத் தொடுவாய்..
29.நினைக்க மறந்தாலும்
மறக்க நினைக்காதே!
30.மன்னிக்கப் பழகு!
மலரும் உன் அழகு!