நண்பர்கள்
கல்லூரி காலம் பகிர்ந்த சோகங்களும்
தொலைந்த நினைவுகள்
புரட்டி பார்கிறேன் ...
முடித்த பின்பு ....நாட்கள் கழிந்தது
சண்டைகளும் சமாதானமும்
கூச்சல்களும் ஏராளம் .....
படியில் பயணம் ... கடைகளில் அரட்டை
கேலிகளும் கிண்டலும் ஆனந்தமாய் ....
பரிமாறிய ஆடைகளும் உடைகளும்...
மாமா மச்சி என்ற பிரிவில்லை
ஏற்றம் இல்லா நிலை கண்டோம்
கூண்டுக்கிளி போல ஆனந்தமாய் ...
நாட்கள் கடந்து பயணம் செய்தேன்
பேருந்தினில் ....
மாணவன் ஒருவன் விழ போவதை கண்டேன் ...
கூச்சலிட்டான் படியில் பயணம் செய்யாதே என்று..
ஞாபக படுத்தினான் என்னையே ..
அன்று நான் கூறிய பதிலை
அண்ணா நாங்கள் எல்லாம் மாணவர்கள்
கை கொடுக்க
என் நண்பனும் என்னருகில் இருக்கிறன் என்று..!