1. அடுத்தவரின் பொருளிலும், பெயரிலும் ஆசை வைத்து பொறாமையடைந்து உன்னிடம் இருப்பதன் மதிப்புத் தெரியாமல் வாழாதே.
2. காலையில் கண் விழிக்கும்போதே உங்களுடைய சிறப்புக்கும் தகுதிக்கும் காரணமான இயற்கைக்கும், சமூகத்திற்கும் நன்றி தெரிவித்து பணியை ஆரம்பியுங்கள்.
3. உற்சாகமான உழைப்பின் மூலமே நீங்கள் உங்களுடைய நன்றியை செலுத்த முடியும். எனவே உங்கள் ஒவ்வொரு செயலிலும் நன்றிப் பெருக்கும், உற்சாகமும் கலந்திருக்கட்டும்.
4. உற்சாகமே உங்கள் செயலை பளிச்சிடச் செய்கிறது, உற்சாகமே உங்கள் செயலின் வேகத்தை அதிகரிக்கிறது. உற்சாகமே உங்களை முழுமையான மனிதனாக்குகிறது. முகத்தைக் கோணி, இழுத்து உலகத்தை நஞ்சு மயமாக்க வேண்டாம்.
5. நீங்கள் உயர்ந்தால் மட்டும் போதாது, இயற்கை அன்னையின் பசுமையைக் காக்கவும், இல்லாதவர் சிரமங்களை போக்கவும் உங்களால் சாத்தியமான அத்தனையையும் செய்வதே உலகுக்கு நீங்கள் கூறும் நன்றி.